கணினி, கைபேசியில் புதிய சாதனை...
இந்தியாவிலேயே
முதன் முறையாக கணினி மற்றும் கைபேசியில் எண்களை மட்டுமே கொண்டு, தமிழில்
டைப் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி சாதனை படைத்திருக்கிறார் தமிழர்
ஒருவர். அவரது சாதனை பற்றி...
எண்கள் மூலம் டைப் செய்யும் முறை
புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது உறவினருடன்
சேர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு கைபேசியில் எளிதாக தமிழ் எழுத்துகளை டைப்
செய்வதற்கான மென்பொருளை உருவாக்கினார். இதையடுத்து, வெறும் எண்களாலேயே
கணினி விசைப்பலகை மற்றும் கைபேசியில் தமிழில் தகவல்களை பாரிமாறி கொள்ளும்
மென்பொருளுக்கான காப்புரிமையையும் பெற்றார்.
16 மொழிகளில் பயன்படுத்தலாம்
தற்போது இந்த சேவையை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ள வாசுதேவன், www.easytype.in
என்ற இணையதளம் மூலம் வரும் ஜனவரி 20-ம் தேதி வரை மென்பொருளை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். தமிழ் உட்பட மொத்தம் 16 மொழிகளில்
பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான நியூமரிக் வடிவில் இந்த மென்பொருள்
உருவாக்கப்பட்டுள்ளது.
அனைவரும்
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்த மென்பொருளை அதிக செலவில்
உருவாக்கியுள்ளதாகவும், இந்த முயற்சிக்கு அரசு உதவ வேண்டும் என்றும்
கோரிக்கை விடுத்துள்ளார் வாசுதேவன்.
0 comments:
Post a Comment